Home இலங்கை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லபட்ட பகுதிக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள, காவல்துறையினர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர் :

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லபட்ட பகுதிக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள, காவல்துறையினர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லபட்ட   இடமான  குளப்பிட்டிப் பகுதிக்கு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள, 5  காவல்துறையினரும்  இன்று காலை அழைத்துச் செல்லப்பட்டு,  அவர்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.  குறித்த 5  காவல்துறையினரும் கை விலங்கிடப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன், சிறைசாலை பாதுகாப்பு அதிகாரிகளினால் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை  அப்பகுதிக்கு இன்று காலையில் சென்ற  தடயவியல் காவல்துறையினர் அங்கு மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சற்று தூரத்தில் உள்ள கொக்குவில் சந்தைக்கு முன்பாகவுள்ள பகுதியில துப்பாக்கி ரவையின் கூடு ஒன்றினையும் கண்டு எடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More