குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தோட்டத்திற்குள் பிரவேசித்து காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினர் தேடுதல் நடத்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
குண்டு துளைக்காத வாகனங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. தமக்கு ஏற்பட்ட அநீதி குறித்து குமார வெல்கம பாராளுமன்ற விசேட சிறப்புரிமை குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment