Home இலங்கை தமிழ் இணைய தளமொன்று முடக்கப்பட்டுள்ளது

தமிழ் இணைய தளமொன்று முடக்கப்பட்டுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

தமிழ் இணைய தளமொன்று முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு இவ்வாறு இணைய தளங்களை முடக்கியுள்ளது. ஊடக அமைச்சில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவ்வாறு இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது.

வடக்கின் நீதிமன்ற தீர்ப்புக்கள் தொடர்பில் பிழையான தகவல்களை இணையத்தில் பிரசூரித்ததாக இந்த இணைய தளம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையிலும் நீதிமன்றிற்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் இந்த இணைய தளம் செய்தி வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சும் ஊடக அமைச்சும் இந்த இணைய தளம் தொடர்பில் விசாரணை நடத்த உள்ளதாகவும் விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் இணைய தளம் முடக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கையில் இணைய தளமொன்று முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More