Home உலகம் அலப்போவிலிருந்து வெளியேறுமாறு சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ரஸ்யா உத்தரவு

அலப்போவிலிருந்து வெளியேறுமாறு சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ரஸ்யா உத்தரவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

நாளை மாலைக்குள் கிளர்ச்சியாளர்கள் அலப்போவை விட்டு வெளியேற வேண்டுமென ரஸ்யா உத்தரவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அலப்போவின் இரண்டு விசேட இடங்களின் ஊடாக கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்பாக வெளியேற அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ள ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு வெளியேறும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் ஆறு வழிகளில் சிவிலியன்கள் வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பாவி சிவிலியன்களை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரஸ்யா அறிவித்துள்ளது.
எனினும் ரஸ்யாவின் இந்த கோரிக்கையை கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More