Home இலங்கை பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில் விசாரணை தேவை.

பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில் விசாரணை தேவை.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

வடமாகாண கல்வி திணைக்களத்தால் எதிர்வரும் 15ம் திகதி வடமாகாண மட்டத்தில்  நடாத்தப்பட இருந்த பரீட்சையின்  வினாத்தாள்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியாகி உள்ளன.

இது குறித்து வடமாகாண சபையின் 65 ஆவது அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அத்துடன் குறித்த பரீட்சை வினாத்தாளையும் அமைச்சரிடம் கையளித்து வினாத்தாள் முன்னதாக வெளியானது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வினாத்தாள் வெளியாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.

வடமாகாண மட்டத்தில் எதிர்வரும் 15ம் திகதி நடைபெற உள்ள தரம் 11 க்கான வரலாற்று பாட வினாத்தாள்களே அவ்வாறு வெளியாகி இருந்தன. குறித்த வினாத்தாள்கள் பரீட்சை திகதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் கடந்த 4ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியாகி இருந்தன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More