Home உலகம் பாகிஸ்தானில் வழிபாட்டுத் தலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 30பேர் பலி :

பாகிஸ்தானில் வழிபாட்டுத் தலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 30பேர் பலி :

by admin

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில்  லாஸ்பெல்லாவில்  உள்ள   புகழ்பெற்ற ஷா நூரானி வழிபாட்டுத் தலத்தில் இன்று மாலை சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரார்த்தனைக்கான சுமார் 500 பேரளவில் கூடியிருந்த வேளை குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினரும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் காயமடைந்தோரை மீட்டு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்

மீட்பு பணிகள் தொடர்ந்து  இடம்பெறுவதால் உயிரிழந்தோரின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More