Home இலங்கை கிளிநொச்சியில் ஏழு அடி கஞ்சா செடியுடன் சந்தேக நபரும் கைது

கிளிநொச்சியில் ஏழு அடி கஞ்சா செடியுடன் சந்தேக நபரும் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில்  ஏழு அடி கஞ்சா செடியுடன் சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். 15-11-2016 செவ்வாய் கிழமை கிளிநொச்சி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற  காவல்துறையினர் ஏழு அடி வரை மிகவும் இரகசியமாக வளர்க்கப்பட்ட கஞ்சா செடியை பிடுங்கி எடுத்ததுடன் அதனை வளர்த்தவா் எனும் சந்தேகத்தில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கறுப்பு நிற பொலீத்தீனால் சுற்றி மறைக்கப்பட்டு மிகவும் இரகசியமாக கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அத்தோடு அங்கிருந்து 25 லீற்றர் கசிப்பும்; மீட்கப்பட்டுள்ளது என காவல்துறையினரால்  தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபரை காவல்துறையினர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More