Home இலங்கை இணைப்பு2 – அவன்ட் கார்ட் கப்பல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது

இணைப்பு2 – அவன்ட் கார்ட் கப்பல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அவன்ட் கார்ட் கப்பலை  35 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி குறித்த கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் உரிய நிறுவனத்திடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளது

Nov 25, 2016 @ 07:03

அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில்  இன்று தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை ஏலத்தில் விடுவதா அல்லது விடுப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. இந்தக் கப்பல் தற்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கப்பலினால் சுற்றாடலுக்கோ அல்லது வேறும் ஏதேனும் நட்டங்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவன்ட் கார்ட் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More