Home பல்சுவை நடிகர் தனுஷ் தமது மகனென ஜீவனாம்சம் கோரும் மதுரைத் தம்பதி

நடிகர் தனுஷ் தமது மகனென ஜீவனாம்சம் கோரும் மதுரைத் தம்பதி

by admin

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தமது மகன் எனவும்  அவர் தமக்கு மாதாந்தம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் எனவும் கோரி  நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்நதுள்ளனர்.

அவர்கள் தமது மனுவில்  தனுஷ் தமது  3வது மகன்   எனவும்  பதினொராம் வகுப்பு பயின்ற போது சென்னைக்கு ஓடி விட்டதாகவும்  பல இடங்களில் தேடியும் கிடைக்காத  தமது மகன்   நடிகனாக திரைப்படத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டு  அவரை பார்க்க முயற்சித்தும் முடியவில்லை   எனவும் தற்போது உடல் நலம் குன்றிய நிலையில் ஏழ்மையில் வசிப்பதால்; மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம்  தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த  வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில்  வழக்கை விசாரித்த நீதிபதி  எதிர்வரும்  ஜனவரி மாதம் 12 ஆம் திகதி நடிகர் தனுஷ் நீதிமன்றத்திற்கு  நேரடியாக  சமூகமளித்து  விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More