Home இலங்கை இனவாதத்தை தூண்டும் அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் – மனோ கணேசன்

இனவாதத்தை தூண்டும் அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் – மனோ கணேசன்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இனவாதத்தை தூண்டும் அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனவாத அடிப்படையில் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இது குறித்த அறிவுறுத்தல்களை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, காவல்துறையினருக்கு வழங்கியுள்ளதாகவும் கடும்போக்குவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் நீதிமன்றின் உத்தரவினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த மதத்தை சேர்ந்தவர்கள், எவ்வாறான அரசியல் பின்னணியை கொண்டுள்ளார்கள் என்பது குறித்து கவனிக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More