Home இலங்கை ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் ஏற்புடையதல்ல – ஜே.வி.பி.

ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் ஏற்புடையதல்ல – ஜே.வி.பி.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் ஏற்புடையதல்ல என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களை அச்சுறுத்தும் ஆபத்தான நடைமுறையை அராசங்கம் பின்பற்றி வருவதாக பாராளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் நாட்டின் பிரதான செய்தித் தாள்களின் முதல்பக்கச் செய்திகள் நாட்டை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியிருந்தார் எனவும் இது ஓர் அடக்குமுறைக்கான உதாரணம் எனவும் தெரிவித்துள்ள அவர் ஊடகங்கள் ஒழுக்க விதிகளை மீறும் போது அது பற்றி விமர்சனம் செய்வதற்கு ஓர் முறையுண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More