Home இலங்கை அரசாங்க மருத்துவர்கள் நாளை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்

அரசாங்க மருத்துவர்கள் நாளை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்க மருத்துவர்கள் நாளை பணிப் பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.  நாளை 24 மணித்தியால போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் எனவும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டே இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

தமது பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், வரவு செலவுத்திட்டத்தில் எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாளை காலை 8.00 மணி முதல் நாளை மறுதினம் காலை 8.00 மணி வரையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More