89
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவில் மத்திய வங்கி மீது சைபர் தாக்குதல் நடத்தி பெருந்தொகைப் பணம் களவாடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் இணைய தளத்திற்குள் பிரவேசித்து சுமார் 31.3 மில்லியன் டொலர் வரையிலான பணத்தை களவாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் அதிகாரி Artyom Sychyov இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது பற்றி அறிவித்துள்ளார். போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி மத்திய வங்கியின் கணக்குகளுக்குள் பிரவேசித்து பணம் கொள்ளையிடப்பட்டுளளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமார் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை களவாடுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0000
Spread the love