Home பிரதான செய்திகள் துஸ்பிரயோக குற்றச்சாட்டை மூடி மறைக்க செல்சியா கழகம் 50000 பவுண்ட்களை வழங்கியது – க்ரே ஜோன்சன்

துஸ்பிரயோக குற்றச்சாட்டை மூடி மறைக்க செல்சியா கழகம் 50000 பவுண்ட்களை வழங்கியது – க்ரே ஜோன்சன்

by admin


துஸ்பிரயோக குற்றச்சாட்டை மூடி மறைப்பதற்கு செல்சியா கழகம் 50000 பவுண்ட்களை வழங்கியதாக முன்னாள் கால்பந்தாட்ட வீரர் Gary Johnson தெரிவித்துள்ளார். 1970களில் இளம் வீரராக கழகத்தில் இணைந்து கொண்டிருந்த போது பயிற்றுவிப்பாளர் பாலியல் ரீதியாக தம்மை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இந்தக் குற்றச்சாட்டை அம்பலப்படுத்தாமல் இருக்க தமக்கு 50,000 பவுண்ட்களை கழகம் வழங்கியது என தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட Eddie Heath தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாலியல் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கோரி கழகம் 2015ம் ஆண்டில் தமக்கு 50,000 பவுண்ட்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More