Home இலங்கை யாழ் மாவட்டத்தில் வனவளம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது

யாழ் மாவட்டத்தில் வனவளம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வனத்திவிமித்ரு எனும் வனவளபாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம்(05) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்  அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் போது உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ் மாவட்டத்தில் வனவளம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே எம்மிடமுள்ள இயற்கை வளங்களை அழியாது பாதுகாக்க தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், பிரதேச செயலாளர்கள், வனவள திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஷாந்த, கால்நடை வைத்தியர் பி.கிரிதர் மற்றும் துறைசார் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More