Home இலங்கை அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே – ஜனாதிபதி

அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே – ஜனாதிபதி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே எனவும்  இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்த கனவு வெறும் கனவாகவே நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017ம் ஆண்டில் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வு நிகழ்வில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More