Home இந்தியா குடிநீருக்காக கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வேண்டும் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல் :

குடிநீருக்காக கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வேண்டும் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல் :

by admin

சென்னையின் குடிநீருக்காக தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வேண்டும் என ஆந்திரா முதல்மைச்சர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால், சென்னையில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனைத் தீர்க்க, உடனடியாக கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர – தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே கிருஷ்ணா நதி நீரை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More