Home இலங்கை புதிய அரசியல் சாசனம் தொடர்பில் அரசியல் கட்சிகள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் அரசியல் கட்சிகள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை அரசியல் சாசன செயற்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து பிரதான அரசியல் கட்சிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர் அமைச்சர் மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் செயற்குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படாத காரணத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெப்ரவரி மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More