Home இலங்கை ஹிருனிகா பிரேமசந்திர வழக்கு ஒன்றில் முன்னிலையாகத் தவறியதாக குற்றச்சாட்டு

ஹிருனிகா பிரேமசந்திர வழக்கு ஒன்றில் முன்னிலையாகத் தவறியதாக குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர வழக்கு ஒன்றில் முன்னிலையாகத் தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நுகேகொடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஹிருனிகா மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஹிருனிகா பிரேமசந்திர நீதிமன்றில் முன்னலையாகவில்லை. ஹிருனிகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.  ஹிருனிகா தவிர்ந்த ஏனைய எட்டு சந்தேக நபர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More