Home இலங்கை டெங்கு நோயை கட்டுப்படுத்த கிளி. வீதியோரங்களில் விழிப்புணர்வு நாடகங்கள் அரங்கேற்றம்.

டெங்கு நோயை கட்டுப்படுத்த கிளி. வீதியோரங்களில் விழிப்புணர்வு நாடகங்கள் அரங்கேற்றம்.

by admin

கிளிநொச்சி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்திணைக்களம் ஏனைய  திணைக்களகங்களையும் பொதுமக்களையும்   இணைத்துக்கொண்டு பலமுனைகளிலும் டெங்கு நோயை ஒழிப்பதற்கான பல முயற்சிகளில்  ஈடுபட்டிருந்தது.

அந்த வகையில்   டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகங்களை அரங்கேற்றி வந்தது.  கடந்த  ( 2017-01-13)   வெள்ளிக்கிழமை  கிளிநொச்சி  சந்தைப்பகுதி மற்றும் பரந்தன் பகுதிகளில் இவ்விழிப்புணர்வு வீதி நாடகத்தை அரங்கேற்றியிருந்தனர். அப்பகுதிமக்கள் பலர்கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

இவ்வீதி நாடகமானது சிவில் பாதுகாப்பு திணைக்கள கலைஞர்களால் கிளிநொச்சி சுகாதார திணைகளகத்தின்  ஏற்பாட்டில் செய்யப்பட்டுவருகின்றமை குறிப்படத்தக்கது. இவ்வாறான விழிப்புணர்வு செயற்திட்டம்  எதிர்வரும் தினங்களில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More