Home இலங்கை தாஜூடீனின் கொலை தொடர்பிலான சீ.சீ.ரீ.வி காட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன

தாஜூடீனின் கொலை தொடர்பிலான சீ.சீ.ரீ.வி காட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பிலான மற்றுமொரு தொகுதி சீ.சீ.ரீ.வி கமரா கட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன. தாஜூடீனின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற வாகனமொன்று தொடர்பிலான கமரா காட்சிகள் ஆய்வு உட்படுத்தப்பட உள்ளன.

இந்த வீடியோ காட்சிகளை கொழும்பு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

தாஜூடீனின் வாகனத்தை பின்தொடர்ந்த வாகனத்தில் சிலர் பயணம் செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ள நிலையில் இந்த நபர்கள் யார் என்பது குறித்தும் வாகனம் குறித்தும் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகளின் ஊடாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த வீடியோ காட்சிகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம்  ட்ரொஸ்கீ அனுமதி வழங்கியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More