Home இலங்கை புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத 300 புலி உறுப்பினர்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத 300 புலி உறுப்பினர்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத 300 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவ அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதவர்கள் எனவும்  இவ்வாறு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத முன்னாள் போராளிகள் ஐரோப்பிய புலி வலையமைப்புடன் தொடர்பு பேணி வருவதாகவும்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த முன்னாள் போராளிகள் வடக்கில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுடனும் தொடர்புபட்டிருப்பதாகவும்   அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More