ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பில் இந்திய அமுலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. எயர்செல்-மக்சிஸ் முறைகேடு வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும்; நிரபராதிகள் என கூறி விடுதலை செய்தது.
இதனை எதிர்பார்க்காத சிபிஐ மற்றும் அமுலாக்கத்துறை, ஆகியன அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அமுலாக்கத்துறை உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்துள்ளது.
Spread the love
Add Comment