Home இலங்கை ஒரே நாடு என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

ஒரே நாடு என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

by admin

குளோபல் தமிழ்; செய்தியாளர்

ஒரே நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்றபோது அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் ,ருந்தது எனவும், அந்த ஒற்றுமை படிப்படியாக சீர்குலைந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் கட்சி அரசியலே அதற்கு பிரதான காரணமாகும் எனவும், இன்று பிரிவினைக்கு வழிவகுக்கும் வகையிலேயே பெரும்பாலான கட்சிகள் பதிவுசெய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி இவ்வாறு பதிவுசெய்யப்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என கோரியுள்ள ஜனாதிபதி இந்தப் பிரிவினையின் காரணமாகத்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன  என தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More