92
குளோபல் தமிழ் செய்தியாளர்
சவால்களை வெற்றிகொள்ள துணிச்சலுடன் செயற்படுவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட சுதந்திர தினத்தில் உறுதி பூணுவோம் என சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்து வாழ்த்துச் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அபிமானம் மிக்க ஓர் தேசமாக, ஒன்றிணைந்த இலங்கை மக்களாக எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்வதற்காக சுயநலத்தை ஒதுக்கி விட்டு, நாட்டிற்காகப் பாடுபட்டு உழைப்பதே எமக்குள்ள சவாலாகும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love