Home இலங்கை சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது

சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜே.என்.பி.யின்தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டதாக சசி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வழக்கினை எதிர்வரும் மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.  மே மாதம் 25ம், 30ம் மற்றும் 31ம் திகதிகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

குறித்த திகதிகளில் சாட்சியாளர்களும் நீதிமன்றில் முன்னிலயாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More