Home இந்தியா முதல்வர் பதவியை சசிகலாவுக்கு வழங்கக் கூடாதென ஆளுனருக்கு உத்தரவிடுமாறு வழக்கு – ஆளுநர் விரைவில் முடிவெடுக்குமாறு ஸ்ராலின் கோரிக்கை

முதல்வர் பதவியை சசிகலாவுக்கு வழங்கக் கூடாதென ஆளுனருக்கு உத்தரவிடுமாறு வழக்கு – ஆளுநர் விரைவில் முடிவெடுக்குமாறு ஸ்ராலின் கோரிக்கை

by admin

முதல்வர் பதவியை சசிகலாவுக்கு வழங்கக் கூடாது என   தமிழக  ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இன்று தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மிரட்டல் காரணமாகவே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவி வலகினார் எனவும்  எனவே, சட்டப்படி அந்த பதவி விலகல் செல்லுபடியாகாது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இஇதேவேளை  தமிழகம் கடந்த ஒரு வாரமாக மிக மோசமான நிலையில் இருப்பதால் ஆளுநர் விரைவில் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், அரசியலமைப்பு சட்டத்தின் படி, நிலையான ஆட்சி அமைய தனது அதிகாரத்திற்குட்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ளர்h

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More