80
தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் 11 நாட்களாக மேற்கொள்ளும் போராட்டத்துக்கு போராட்டத்துக்கு ஆதரவாக வவுனியாவிலும் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவு மக்களுக்கு நீதிவேண்டும், மக்களின் நிலங்களிலிருந்து இராணுவமே வெளியேறு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதில் என்ன?, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், மைத்திரி ரணில் அரசே அரசியல் வாக்குறுதி என்னாச்சு? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன், கோஷமெழுப்பியவாறு மக்கள் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.
Spread the love