Home இலங்கை மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்பட வேண்டும் – சம்பிக்க ரணவக்க

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்பட வேண்டும் – சம்பிக்க ரணவக்க

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்பட வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரியை எதிர்ப்பதாகவும் அதனை மூட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தாம் ஆதரவளிப்பதாகவும் தனியார் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொள்ளும் மாணவர்களின் தகுதி தொடர்பில் சிக்கல் நிலவி வருவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொள்ள முடியாத திறமையான மாணவ மாணவியர், அரசாங்க பல்கலைக்கழகங்களில் கட்டணம் செலுத்தி பட்டக் கல்வியை பூர்த்தி செய்ய அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More