Home இலங்கை திருமலை கிளிவெட்டி குமாரபுரம், பொதுமக்கள் படுகொலை, 21 வருடங்கள் நிறைவு தின நினைவேந்தல் நிகழ்வு:-

திருமலை கிளிவெட்டி குமாரபுரம், பொதுமக்கள் படுகொலை, 21 வருடங்கள் நிறைவு தின நினைவேந்தல் நிகழ்வு:-

by admin

திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரம் பொதுமக்கள் மீதான படுகொலை தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் 21 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அதனை முன்னிட்டு இன்று குமாரபுரத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

குமாரபுரம் கிராமத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி இலங்கை ராணுவம் மற்றும் துணைப்படைகள் மேற்கொண்ட படுகொலை சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 36 பேர்வரை படுகாயமடைந்தனர்.
இப்படுகொலைகள் தொடர்பாக ராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற வழக்கில், 8 இராணுவ வீரர்கள் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்ட நிலையில், ஒருவர் பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்டதுடன் ஒருவர் இறந்துவிட்டார்.
எதொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், அவர்களும் குற்றமற்றவர்கள் என தெரிவித்து கடந்த 2016ஆம் ஆண்டு அவர்களும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More