Home இலங்கை தம்புள்ளை மோதல் சம்பவத்தை அடுத்து முஸ்லீம் வர்த்தக முக்கியஸ்தர்களுடன் ரிஷாத் பதியுதீன் சந்திப்பு

தம்புள்ளை மோதல் சம்பவத்தை அடுத்து முஸ்லீம் வர்த்தக முக்கியஸ்தர்களுடன் ரிஷாத் பதியுதீன் சந்திப்பு

by admin

தம்புள்ளை நகரில் கடந்த புதன் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன்   பதட்டமான சூழ்நிலை ஒரு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை  காலை தம்புள்ளை நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லீம் வர்த்தக முக்கியஸ்தர்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தற்போதைய பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இன நல்லிணக்க விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு பங்களாதேஷில் இருந்து நாடு திருப்பிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சனிக்கிழமை  .டம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More