Home இலங்கை மன்னார் மனித புதைகுழி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவு

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவு

by admin


மன்னார் – மாந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான முழுமையான அறிக்கையை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்து, சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விசேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாந்தை புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ஆம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த புதைகுழி தொடர்பில் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டில் உள்ள சிறந்த தடயவியல் நிபுணர் குழுவிற்கு இது குறித்து உதவி வழங்குமாறு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் எனினும் அதற்கான பதில்; கிடைக்கவில்லையெனவும் காணாமல் போன குடும்பங்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்

இதனையடுத்து  குறித்த புதைகுழி தொடர்பில் முழுமையான அறிக்கையை எதிர்வரும்  27ம்திகதி மன்றில் சமர்ப்பிப்பதோடு, அடுத்த கட்ட நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டுமென விசேட குற்றப்புலனாய்வு பிரிவிற்கு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More