Home உலகம் வடகொரியா ரொக்கெட் என்ஜின் பரிசோதனை நடாத்தியது:- அணு ஏவுகணை உருவாக்க முயற்சியா?

வடகொரியா ரொக்கெட் என்ஜின் பரிசோதனை நடாத்தியது:- அணு ஏவுகணை உருவாக்க முயற்சியா?

by admin

வடகொரியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட, உயர் உந்து சக்தி எஞ்சினை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட கொரியா, சர்வதேச தரத்தில் செயற்கைக்கோள்கைளை செலுத்தும் முயற்சியை அடைய இந்த எஞ்சின் உதவியாக இருக்கும் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த ரொக்கெட் எஞ்சின் சோதனையை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், நீண்ட தூர அணு ஏவுகணையை உருவாக்கும் வட கொரிய அரசின் இலக்கின் ஓர் அம்சமாக இது இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியா அண்மையில் 2 அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. அமெரிக்காவை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் தயாரித்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் ஏற்கனவே அறிவித்த்திருந்தார். ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை வடகொரியா கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் அதி நவீன சக்தி வாய்ந்த ராக்கெட் என்ஜின் பரிசோதனையை வடகொரியா நடத்தி உள்ளது. இது தனது சொந்த முயற்சியில் விண்ணுக்கு செயற்கை கோள்களை அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளதாக, கருதப்படுகிறது. நேற்று நடந்த ராக்கெட் என்ஜின் பரிசோதனையை வடகொரியாவின் ராக்கெட் தொழிற்துறையில் புதிய உருவாக்கம் என அதிபர் கிம் ஜாங்-யங் பிரகடனம் செய்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் சீன தலைநகர் பெய்ஜிங் சென்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை அண்மையில் சந்தித்தார். இந்த சந்திப்பில் வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை இரு நாடுகளும் இணைந்து சமாளிப்போம் என உறுதி அளித்தார்.

இத்தருணத்தில் வட கொரியா ராக்கெட் என்ஜின் பரிசோதனை நடத்தியிருப்பது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More