Home இலங்கை மங்கள சமரவீர எதேச்சாதிகாரமாக செயற்பட்டுள்ளார் – சரத் வீரசேகர

மங்கள சமரவீர எதேச்சாதிகாரமாக செயற்பட்டுள்ளார் – சரத் வீரசேகர

by admin


வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதேச்சாதிகாரமாக செயற்பட்டுள்ளார் என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தம் சர்வதேச யுத்தமல்ல எனவும், அது உள்நாட்டு யுத்தம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பிலான ஆவணத்தில் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளாமலே  மங்கள சமரவீர கையொப்பமிட்டுள்ளார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என தெரிவித்துள்ள அவர் அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என சர்வதேச நிபுணர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய ஆவணத்தை தாம் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் எனவும்  மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More