Home இலங்கை கேப்பாபுலவு காணி விவகாரம் இரண்டு வாரங்களில் தீர்வென்கிறார் மீள்குடியேற்ற அமைச்சர் :

கேப்பாபுலவு காணி விவகாரம் இரண்டு வாரங்களில் தீர்வென்கிறார் மீள்குடியேற்ற அமைச்சர் :

by admin

இராணுவத்தினரின் ஆளுகையில் உள்ள கேப்பாபுலவு காணி விவகாரம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.  கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனுடன்  கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியாகவும் அவர் தெரிவித்தார்.

கேப்பாபுலவு மக்கள் 22ஆவது நாளாக இன்றும் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடர்கின்றனர். 128 குடும்பங்களிற்கு சொந்தமான 482 ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கேப்பாபுலவு விமானப் படைத்தள வாசலின் அருகே இப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது.

கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமம், சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாப்புலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள்இ பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More