Home இலங்கை எழிலன் தொடர்பான வழக்கில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு நீதவான் மறுப்பு

எழிலன் தொடர்பான வழக்கில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு நீதவான் மறுப்பு

by admin


மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு  முல்லைத்தீவு நீதவான் சம்சுதீன்  மறுப்பு தெரிவித்துள்ளார்.  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதப் பிரிவு தலைவரான சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் காணாமல் போனமை குறித்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எழிலன் உள்ளிட்ட 12 பேர் 58ம் படைப் பிரிவிடம் சரணடைந்திருந்தனர் எனவும் அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்து  வட மாகாணசபையின் உறுப்பினரும்  எழிலனின் மனைவியுமான ஆனந்தி சசிதரன், நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாணைகளின்  நீதிமன்றில் சாட்சிமளித்திருந்த  58ம் படைப் பிரிவின் தற்போதைய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் காலிங்க குணவர்தன இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் பற்றி தமக்கு தெரியாது எனவும் அப்போது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடயைமாற்றியிருந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து  ஆனந்தி சசிதரனின் சட்டத்தரணிகள் மேஜர் ஜெனல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.  இந்தநிலையில் இந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதவான்  இந்த மனு எதிர்வரும் 27ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More