Home இலங்கை யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி முதலமைச்சரை சந்தித்துள்ளார்.

யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி முதலமைச்சரை சந்தித்துள்ளார்.

by admin


யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை  சந்தித்து பேசியுள்ளார்.  முதலமைச்சரின் இல்லத்தில்  இடம்பெற்ற இச்சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு பல நல்ல விடயங்கள் தொடர்பாக பேச வைத்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

இங்குள்ள பிரதானமான பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார் எனவும்  இங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றுவது தனது பிரதான கடமை எனவும் தாமதமானாலும் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More