Home இலங்கை அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் – தினேஸ் குணவர்தன

அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் – தினேஸ் குணவர்தன

by admin


அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கம் நட்டஈடாக ஒரு லட்சம் ரூபா அறிவித்திருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பினை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென  பொரளையில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்றுடன் இன்றுடன் ஐந்து நாட்கள் கடந்துள்ளதாகவும் இதனை இயற்கை அனர்த்தமாக கருதிவிட முடியாது எனவும்  சுட்டிக்காட்டியுள்ள அவர் ஓரு லட்சம் ரூபா நட்டஈட்டை ஓர் தற்காலிக நட்டஈடாக வேண்டுமானால் ஏற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார். நட்டஈடாக அரசாங்கம் வழங்கும் பணம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பணம் அல்ல எனவும், அவை பொதுமக்களின் பணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More