Home இலங்கை மட்டக்களப்பில் 57.331 ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை – சீ.யோகேஸ்வரன்

மட்டக்களப்பில் 57.331 ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை – சீ.யோகேஸ்வரன்

by admin


மட்டக்களப்பு, மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்குச் சொந்தமான 57.331 ஏக்கர் காணி இதுவரையில் விடுவிக்கப்படாது உள்ளதென  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிரான் பிரதேச மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   வாகரை, வாழைச்சேனை, கிரான், ஏறாவூர், ஆரையம்பதி, மட்டக்களப்பு உள்ளிட்ட  பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பகுதிகளில் இரணுவத்தினரினால் 25.58 ஏக்கரிலும் கடற்படையினரினால் 2.546 ஏக்கரிலும் பொலிஸாரினால் 29.205 ஏக்கரிலும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ள அவர்    முறக்கொட்டாஞ்சேனையில் பாடசாலை கட்டடத்துடன் உள்ளடங்கியதாக 40 குடும்பங்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்டச் செயலகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான விடுதிகளையும் பாதுகாப்புத் தரப்பினர் தங்களின் வசம் வைத்துள்ளார்கள் எனவும் குறித்த விடுதிகள் மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படுவதுடன் அரசாங்கக் கட்டடங்களிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டு அரச நிர்வாகத்துக்குப் பாதுகாப்புத் தரப்பினர் வழிவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More