Home இலங்கை மீத்தொட்டமுல்லையில் வீடுகளை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கு புதிய வீடுகள் :

மீத்தொட்டமுல்லையில் வீடுகளை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கு புதிய வீடுகள் :

by admin


மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் முழுமையாக பாதிக்கப்பட்ட 65 வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

முதலாவது கட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த 30 குடும்பங்களுக்கு அண்மையில் வீடுகள் வழங்கப்பட்டன. இந்த வீடுகளுக்காக அரசாங்கம் 3920 லட்ச ரூபாவை செலவிட்டுள்ளது.
மேலும் இந்த வீட்டுரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களை கொள்வனவுசெய்வதற்காக வீட்டுரிமையாளர் ஒருவருக்கு தலா இரண்டரை லட்ச ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More