Home இலங்கை அமெரிக்க குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை – பசில் ராஜபக்ஸ

அமெரிக்க குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை – பசில் ராஜபக்ஸ

by admin


அமெரிக்க குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ள அவர் ராஜபக்ஸக்களை அரசியலிலிருந்து ஓரம் கட்டும் நோக்கிலேயே 19ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். பசில் ராஜபக்ஸ அமெரிக்க குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருந்தால் அவரினால் இலங்கைத் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More