Home இலங்கை ஆரையம்பதி மாரியம்மன் கோயிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் இழுந்து வீழ்நததில் 18 பேர் காயம்

ஆரையம்பதி மாரியம்மன் கோயிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் இழுந்து வீழ்நததில் 18 பேர் காயம்

by admin

மட்டக்களப்பு, ஆரையம்பதி மாரியம்மன் கோயிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம் ஒன்று இன்று மாலை இடிந்து விழுந்துள்ளதில்  18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

அதில் 08 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   சுமார் 30 அகலம் 40 அடி நீளம் கொண்ட கோவில் மணிமண்டபத்திற்கான மேல் தளத்திற்கு கொங்க்ரீட் இடும்பணி இன்று மேற்கொள்ளப்பட்ட போதே இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டிடப்பணிகளில் சுமார் 40 பேர் வரை ஈடுபட்டிருந்ததாகவும் மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் பணிகள் இடம்பெறுகின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More