Home விளையாட்டு சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அபார வெற்றி

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அபார வெற்றி

by admin


சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி, இந்தியாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் சிக்கர் தவான் 125 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 78 ஓட்டங்களையும், தோனி 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லசித் மாலிங்க இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஒவர்களில் 3 விக்கட்டுகளை மட்டும் இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் குசால் மெண்டிஸ் 89 ஓட்டங்களையும், தனுஸ்க குணதிலக்க 76 ஓட்டங்களையும், அன்ஜலோ மெத்யூஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More