Home இலங்கை இனக் குரோதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை சட்ட மா அதிபருக்கு அறிவிப்பு

இனக் குரோதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை சட்ட மா அதிபருக்கு அறிவிப்பு

by admin


இனக் குரோதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை, சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளது. சிறுபான்மை இன மற்றும் மதச் சமூகங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் குரோத செயற்பாடுகளை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் அளித்த ஆணைக்கு புறம்பான வகையில் அரசாங்கம் செயற்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன மதக் குரோதத்திற்கு நாட்டில் இடமளிக்கப்பட முடியாது எனவும்  குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறப்படாத நிலைமை இனி நீடிக்கப்படாது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நாட்டின் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More