Home விளையாட்டு தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா

தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா

by admin

 
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த  அனில் கும்ப்ளே  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இவரது பதவிக்காலம் ஐசிசி சம்பியன் கிண்ண தொடருடன் முடிவடைவதாக இருந்த நிலையில் மேலும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில்   இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேவிற்கும் இடையில் காணப்பட்ட கருத்து வேறுபாடு  ஐசிசி சம்பியன் கிண்ண தொடரில் வெளிப்பட்டது.

இது தொடர்பில் இருவருடனும் இந்திய கிரிக்கெட கட்டுப்பாட்டு சபை  பேச்சுவார்த்தை  நடத்தியபோதும் பயனளிக்கவில்லை. இந்நிலையில் அனில் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ஒருவருட கால தலைமை பயிற்சியாளர் பதவிக்கான காலம் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More