Home இலங்கை 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தீர்வு நோக்கி பயணிப்போம் – கர்தினால் பேராயர் மல்கம்

13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தீர்வு நோக்கி பயணிப்போம் – கர்தினால் பேராயர் மல்கம்

by admin


இனப்பிரச்சினை தீர்வாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிச் சிங்கள சட்டம் இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.

இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இல்லாததைப் பற்றி பேசுவதை விட இருக்கின்ற விடயம் ஒன்றில் ஆம்பித்து முன்நோக்கிச் செல்ல வேண்டும். சிலர் இல்லாததைப் பேசுகின்றனர். ஆகவே இருக்கின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுக்கான வழியை தேட முடியும் என்று ஆயர் சுட்டிக்காட்டினார்.

1991ஆம் ஆண்டு யுத்தம் கடுமையாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் யாழ் மாவட்டம் கிள்நொச்சியுடன் துண்டிக்கப்பட்டிருந்த, முன்னாள் ஆயர் தியோகுப்ப்பிள்ளை ஆண்டகையின் பொன், வெள்ளி, பவழ விழாவில் கலந்துகொள்வதற்காக சேறும் சகதியும் நிறைந்த கொம்படிப் பாதையால் பல சிரமங்கள் மத்தியில் யாழ்ப்பாணத்திற்கு வந்ததாகவும் ஆயர் ஞாபகமூட்டினார்.

தமிழர்கள் தங்களை இரண்டாம் தர பிரஜைகளாக கருதும் நிலையை தனிச் சிங்களச் சட்டமே ஏற்படுத்தியது. ஆதனால்தான் யுத்தம் ஆரும்பமாகியது என்று கூறிய ஆயர் ஒற்றுமையை கட்டியெழுப்பக் கூடிய தீர்வை நோக்கி ஒன்றாக பயணிப்போம் என்று வலியுறுத்தினார்.

கத்தோலிக்க திருச்சபையின் பாடசாலைகள் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று வலியுறுத்திய ஆயர் சென் பற்றிக் கல்லுரி கல்விமான்கள் பலரையும் சமூகப் பிரக்ஞையுடைய பலரையும் உருவாக்கியுள்ளது. இதையிட்டு  பெருமைப்படுவதாகவும் ஆயர் சொன்னார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More