Home இலங்கை முழங்காவிலில் வர்த்தகநிலையம் தீக்கிரை – சுமார் இரண்டு கோடி இழப்பு – திட்டமிட்ட செயலா என சந்தேகம் :

முழங்காவிலில் வர்த்தகநிலையம் தீக்கிரை – சுமார் இரண்டு கோடி இழப்பு – திட்டமிட்ட செயலா என சந்தேகம் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இன்று அதிகாலை பன்னிரண்டு  முப்பது  மணியளவில் முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் உள்ள கண்ணன் பல்பொருள் வாணியம் தீப்பிடித்து  எரிந்ததில் சுமார் இரண்டு கோடி பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக முழங்காவில் காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இன்று அதிகாலை  பன்னிரெண்டு  நாற்பத்தைந்து  மணியளவில் கடை உரிமையாளருக்கு நண்பர்களால் கடை எரிவதாக வழங்கப்பட்ட  தகவலுக்கு அமைவாக கடை உரிமையாளரால் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் மற்றும் தீயணைப்பு பிரிவினருக்கும்  தகவல் வழங்கப்பட்டதனை  அடுத்து     சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவ  கடற்ப்படை நீர்த்தாங்கி வாகனங்கள் உட்பட தீயணைப்பு வாகனம்  என்பன தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுதும் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது

குறித்த தீ திட்டமிட்டு  எரியூட்டப்பட்டிருக்கலாம் என காவல்துறையினரால்  சந்தேகிக்கப்படுகின்ற நிலையிலும் சந்தேக நபர்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.  எனினும் மேலதிக விசாரணைகளை முழங்காவில்   காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More