Home இந்தியா காஷ்மீரில் விரைவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் – இந்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை

காஷ்மீரில் விரைவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் – இந்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை

by admin


காஷ்மீரில் விரைவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக இந்திய புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.  தீவிரவாத தலைவர்களில் ஒருவரான வானி  என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதன் முதலாண்டு நினைவுதினம் வர உள்ள நிலையில் அதற்கு முன்னதாக காஷ்மீரில் பல இடங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர் என புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

காஷ்மீரில் தற்போது அமர்நாத் பனி குகையில் தரிசனம் செய்ய பக்தர்கள் யாத்திரை சென்று கொண்டுள்ளதால் அவர்களில் 150 பேரை கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பல பகுதிகளிலும் முஜாகிதீன் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும்  எனவே பாதுகாப்பு படையினரை உஷார்படுத்தும்படி புலனாய்வுத்துறை   அறிவுறுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More