Home இலங்கை அதிகாரப்பகிர்வுக்கு சு.க.வும் ஐ.தே.க.வும் இணங்கியுள்ளன: கிளிநொச்சியில் கிரியெல்ல :-

அதிகாரப்பகிர்வுக்கு சு.க.வும் ஐ.தே.க.வும் இணங்கியுள்ளன: கிளிநொச்சியில் கிரியெல்ல :-

by admin


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவித்துள்ளன என உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரிவித்தார்.

கிளி­நொச்­சியில் யாழ்.பல்­க­லைக்­க­ழக வளா­க­மாக விவ­சாய, பொறி­யியல் பீடங்­களின் வச­தி­களை மேம்­ப­டுத்தும் திட்­டத்தின் கீழ் விவ­சாய பீடத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள மாணவர் திறன் அபி­வி­ருத்தி கட்­ட­டத்­தொ­கு­தியும் பொறி­யியல் பீடத்­திற்­கான இரண்டு மாடிக்­கட்­ட­டமும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­படும்  நிகழ்வு நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இலங்கை வரலாற்றில்  முதற் தடவையாக பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகளின் ஒத்துழைப்புடன் அரசியல மைப்பிற்கான செயற்பாடுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதாகவும் அவர் கூறினார்.

மேலும் தேசிய அர­சாங்­கத்­தினை ஆட்­சிக்கு கொண்டு வந்த தமிழ் மக்­க­ளுக்கு நன்­றி. எவ்­வி­த­மான அர­சியல் தலை­யீ­டு­களும் இடம்­பெ­ற­மாட்­டாது என்றும் அவர் தெரிவித்தா்ர.

நாங்கள் பாட­சா­லைக்கு செல்லும் காலத்தில் எங்­க­ளுடை பெற்றோர் யாழ்ப்­பாண மாண­வர்கள் போன்று கல்­வியைப் பயி­லுங்கள் என்று கூறிக்­கொண்டே இருப்­பதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

கடந்த காலத்தில் இரண்டு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. 1972ஆம் ஆண்டு முதற்­த­ட­வை­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. 1978ஆம் ஆண்டு இரண்­ட­வாது தட­வை­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளிலும் தமிழ் அர­சியல் கட்­சிகள் அதில் பங்­க­ளிப்­புக்­களைச் செய்­தி­ருக்­க­வில்லை என்றும் அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பா­டு­க­ளின்­போது தமிழ் அர­சியல் கட்­சிகள் புறக்­க­ணிப்­பி­னையே செய்­தி­ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்­வா­றி­ருக்­கையில் வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக பாரா­ளு­மன்­றத்தில்   வட்­ட­மே­சையில் அமர்ந்து புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான புது வரை­பொன்றை தயா­ரிக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ளதாகவும் அவர் பேசினார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு சம்­மதம் தெரி­வித்­துள்­ளன. முதற்­த­ட­வை­யாக பாரா­ளு­மன்­றத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் பங்­கேற்­புடன் சிங்­கள, தமிழ், முஸ்லிம் தலை­மை­களின் பங்­கேற்­புடன் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ன­றன என்றும் சுட்டிக்காட்டினார்.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்­திரம் அடைந்­த­போது ஆசிய மற்றும் உலக நாடு­களில் உள்ள அனை­வரும் இலங்­கையை முன்­மா­தி­ரி­யாக பார்த்­தார்கள். உதா­ர­ண­மாக சிங்­கப்பூர், மலே­சியா போன்ற நாடுகள் எங்­க­ளு­டைய இலக்கு இலங்­கை­யைப்­போன்று வரு­வ­தாகும் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் 1950களில் இன­வாத அர­சியல் தலை­தூக்­கி­யது. அதி­கா­ரத்­தினை தம­தாக்­கு­வதே பிர­தான இலக்­காக இருந்­தது. யாரும் விரும்­பாத ஆயுத கலா­சாரம் தோற்றம் பெற்­றது. தற்­போது முப்­பது வரு­ட­காலம் வீணாக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது இன­வாத அர­சியல் சம்­பந்­த­மாக அனைத்து கட்­சி­களும் தம்மை மீட்­டிப்­பார்த்து ஒரு முடி­வுக்கு வந்­துள்­ளன.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அனைத்து கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் வட்­ட­மே­சைக்கு வந்­துள்­ளார்கள் என்று . நான் நினை­கின்றேன் அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்கை எதிர்­வரும் ஆகஸ்ட், செப்­டம்­பரில் சமர்ப்­பிப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More