Home இலங்கை மயிலிட்டி துறைமுகம் அதனுடன் இணைந்த 54 ஏக்கர் காணியும், 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டன: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

மயிலிட்டி துறைமுகம் அதனுடன் இணைந்த 54 ஏக்கர் காணியும், 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டன: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் 54 ஏக்கர் நிலப்பரப்பு யாழ்.பாதுகாப்பு தலைமையகத்தினால் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ள குறித்த காணிகள் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்தப் பிரதேசத்தில் சுமார் 50 குடும்பங்கள் மீளக் குடியமரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மயிலிட்டி துறைமுகம் அதனுடன் இணைந்த 54 ஏக்கர் காணி 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளன. இந்த வகையில் துறைமுகம் அதனை அண்டிய 54ஏக்கர் நிலப்பரப்பின் பத்திரம் யாழ்ப்பாணம் இராணுவ கட்டளை தளபதி ஹெட்டியாராச்சியால் யாழ்ப்பாண அரச அதிபர் என்.வேதநாயகம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More